இஸ்ரேல் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டு காலத்திற்கும் மேலாக பாலஸ்தீனம் காசாவிடம் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வந்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் நடைபெற்ற போரில் பல ஆயிரக்கணக்கான  மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் தாக்குதலில் காசா பகுதியில் வாழும் மக்கள் அடிப்படைத் தேவைகள் எதுவும் கிடைக்காமல் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்தப் போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தன அதன்படி நீண்ட முயற்சிக்கு பின் கடந்த மாதம் முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து இருதரப்பு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனால் காசாவில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி பெஞ்சமின் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இஸ்ரேல், காசா போர் நிறுத்தத்திற்கு பின் நடைபெற்ற முதல் சந்திப்பு என்பதால் உலக நாடுகளில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பெஞ்சமின் இருவரும் ஒரே மேடையில் பேட்டியளித்தனர், இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி அமெரிக்க படைகளை பயன்படுத்தி காசாப்பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள் ஆயுதங்களை அகற்றும் பணியை மேற்கொள்ளும்.

மேலும் சேதமடைந்த கட்டிடங்களை அகற்றி வளர்ச்சிக்குரிய பணிகளை உருவாக்குவோம். பொருளாதாரம் மேம்பாடு மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்போம். அப்பகுதியில் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டுவோம் இதற்கு நாங்கள் பொறுப்பு என்று பேட்டியளித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரேல் தலைவர் பெஞ்சமின், டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பு வரலாற்றை மாற்றக்கூடிய ஒரு அறிவிப்பாகும். இஸ்ரேல் ஒருபோதும் வலுவாக இருந்தது இல்லை ஈரானின் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு நாங்கள் பலவீனமாகவில்லை.

எனினும் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை கருதி அமைதியை கொண்டு வருவது குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தினோம். காசாவில் இஸ்ரேலுக்கு மூன்று இலக்குகள் உள்ளது. அவை ஹமாசின் ராணுவத்தை முழுவதுமாக அழிப்பது, அவர்களது நிர்வாக கட்டமைப்பை சீர்குலைப்பது, எங்கள் அனைத்து கைதிகளையும் விடுவிப்பது ஆகியனவாகும். காசா இனி ஒரு போதும் இஸ்ரலுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.