நாமக்கல் மாவட்டத்திலுள்ள போருபத்தி பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இந்துமதி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 11 மாத கை குழந்தையும் இருந்துள்ளார்கள். இந்த தம்பதியின் மகன் யாத்விக் (3) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்துமதி தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்காக குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டே தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அந்த தொட்டி 10 அடி ஆழமாக இருந்த நிலையில் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.