நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி சர்ச்சையாக பேசி வருகிறார். இதற்கு பெரியார் அமைப்பினர் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலையை அவமதித்ததாக கருதப்பட்ட புகாரில் தற்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளராக இருக்கிறார். சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி அவதூறாக பேசி வரும் நிலையில் இவர் பெரியார் சிலையை அவமதித்ததாக பெரியார் அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை எடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அஜயை கைது செய்தனர்.