
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஈசிஆரில் இளம்பெண்களை திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்து வாலிபர்கள் துரத்திய சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை காவல்துறை கொடுக்கக்கூடிய பத்திரிக்கை செய்தி தான் நகைப்பை ஏற்படுத்துகிறது. பெண்கள் காரில் போறாங்க. கயவர்கள் வண்டியை நிறுத்தி அட்டூழியம் பண்றாங்க. அதற்கு காவல்துறை அறிக்கை கொடுக்குறாங்க. தப்பு பெண்கள் மேல் தான் வண்டி போகும் போது இடிச்சுட்டு நிக்காம போனாங்க அப்படின்னு சொல்றாங்க.
அந்த வாலிபர்களை பார்த்தாலே தெரியும். அது பாலியல் ரீதியான தொந்தரவு தான் என்று. காவல்துறை பொய்யான அறிக்கை கொடுத்து எத்தனை முறை அவர்களது முகத்தில் கரியை பூசி கொள்வார்கள்? ஒவ்வொரு விஷயத்திலும் பெண்களையே குற்றவாளி ஆக்குகிறார்கள். அவங்க தப்பு பண்ணாங்க நாங்க என்ன பண்ண முடியும் அப்படின்னு கேக்குறாங்க. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கேடுகெட்ட செயலுக்கு தமிழக காவல்துறை துணை போகாதீங்க. தயவுசெய்து அதை பண்ணாதீங்க. தப்புன்னா மட்டும் தப்புன்னு சொல்லுங்க என கூறியுள்ளார்