
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதி அருகில் உள்ள ஹெவ்லா நகரில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை சுற்றி வளைத்து விரட்டி விரட்டி கடித்துள்ளது. சிறுமி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தெரு நாய்களை அடித்து விரட்டியுள்ளனர்.
பின்னர் படுகாயம் அடைந்த சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிறுமியை நாய்கள் கடித்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பார்ப்போரின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.