வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கதுறையினர் சோதனை செய்ய தொடங்கினர். காட்பாடியில் இருக்கும் வீடு பூட்டி இருந்ததால் காலை 9 மணி முதல் அதிகாரிகள் காத்திருந்தனர். வெளிநாட்டில் இருக்கும் கதிர் ஆனந்த் தனது உறவினரை வைத்துக்கொண்டு வீட்டில் சோதனை செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்ததையடுத்து தற்போது சோதனை தொடங்கியுள்ளது.