டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படி இம்முறை இரண்டு பெண்கள் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய தகவல் தெரிய வராத நிலையில் ஒரு பெண் தனது காதலன் டெல்லி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிவதாகவும் அவரை இங்கு அழைக்க வேண்டுமா என்றும் மிரட்டல் தோனியில் கேட்கிறார்.

அதற்கு மற்றொரு பெண் போ போய் வர சொல்லு என்று கோபமாக சொல்கிறார். இந்த காணொளி தற்போது வைரல் ஆகி உள்ளது.

https://x.com/snehamordani/status/1871121305879408882