மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் முதல்வராக பாஜக கட்சியின் மாநில தலைவர் தேவேந்திர பாட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவின் நிரந்தரத் துணை முதல்வர் என்று அழைக்கப்படும் அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு நாள் முதல்வர் ஆவார் என்று தற்போது தேவேந்திர பாட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அதாவது சட்டப்பேரவையில் ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போதும் மகாராஷ்டிரா முதல்வர் அஜித் பவார் ஒருநாள் முதல்வர் ஆவார் என்றும் அவருடைய உழைப்பு நிச்சயம் அதை சாத்தியப்படுத்தும் என்றும் கூறினார். மேலும் மகராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 6 முறை அஜித் பவார் துணை முதல்வராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் அவர் ஒரு நாள் முதல்வராக இருப்பார். இதேபோன்று தற்போது நிஜத்திலும் மகராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவார் ஒரு நாள் முதல்வராக செயல்படுவார் என்று தேவேந்திர பாட்னாவிஸ் அறிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.