பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க சந்தித்து பேசி உள்ளார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இருநாட்டு மீனவர்கள் பிரச்சனையில் சமூக தீர்வு எட்டப்படுவதையே இலங்கை விரும்புகிறது. மீன்பிடித் தொழிலை பாதிக்கும் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார உதவிக்கு மிக்க நன்றி.

இந்திய வெளியுறவு கொள்கையில் இலங்கைக்கு சிறப்பான இடம் உண்டு. Bottom trawling முறையை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றது. இந்தியாவிற்கு சட்ட விரோதமான செயல்பாடுகள் இலங்கையில் நடைபெற ஒருபோதும் இலங்கை அரசு அனுமதிக்காது என கூறியுள்ளார்.