மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் உத்திரபிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த வியாழக்கிழமை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுதப்பட்ட ஒரு கேள்விக்கு நிதின் கட்காரி பதில் வழங்கிய போது தான் இந்த தகவலை தெரிவித்தார்.

அதாவது ஆண்டுதோறும் நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி 7.76 லட்சம் பேர் உயிரிழக்கும் நிலையில், இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறினார். அதன்பிறகு போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காமல் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் தான் விபத்துகள் நடப்பதாக கூறினார். நான் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது விபத்துகளின் அளவை 50 சதவீதம் மறைவுக்கு குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் என்னால் அதை செய்ய முடியவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

சாலை விபத்துகளால் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு வருடத்தில் 27,000 உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில் அந்த மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. அதன்பிறகு இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இங்கு விபத்துகளினால் வருடத்திற்கு 18000 பேர் சராசரியாக உயிரிழக்கிறார்கள். இதைத்தொடர்ந்து 15000 பேர் ஆண்டுக்கு உயிரிழக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாம் இடத்திலும், 13000 பேர் உயிரிழக்கும் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் இருக்கிறது. மேலும் நகரங்களை பொருத்தவரையில் வருடத்திற்கு 1400 உயிரிழப்புகள் என டெல்லி முதலிடத்திலும், 915 உயிரிழப்புகள் என பெங்களூரு இரண்டாம் இடத்திலும், 850 உயிரெழுப்புகள் என ஜெய்ப்பூர் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது என்று கூறினார்.