
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் 38 வயதான நர்கிஸ் சென்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் இறந்துவிட்டார். இதனால் அவருடைய மருமகனான 28 வயதுடைய ஷாருக் என்பவருடன் அவருக்கு கள்ள உறவு ஏற்பட்டது. இருவரும் தகாத உறவில் இருந்த நிலையில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால் திடீரென நர்கிஸ் ஷாருக்கை விட்டுவிட்டு வேறொரு நபருடன் உடலுறவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஷாரூக் தன்னுடைய அத்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஷாருக்கை கைது செய்துள்ளனர். மேலும் மருமகன் அத்தையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் வேறொருவருடன் உடலுறவு வைத்ததால் கோபத்தில் மருமகன் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.