
இன்றும், நாளையும் சவுதி அரேபியாவில் இருக்கும் ஜெட்டா நகரில் ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. 574 வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயரை பதிவு செய்தனர். அதில் 574 பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த நிலையில் யுஸ்வேந்திர சாஹலை பஞ்சாப் அணி ரூ.18 கோடிக்கு வாங்கியது.