
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன். இவருக்கு எதிரான தேர்தல் தகராறு வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அமைச்சர் பெரிய கருப்பன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தகராறு நடந்த போது அமைச்சர் பெரிய கருப்பன் அந்த இடத்தில் இல்லை என்று வாதிடப்பட்டது. மேலும் இதன் காரணமாக அமைச்சர் மீதான வழக்கை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.