30 வயதான பெண் ஆசிரியர் ஒருவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேரிலாந்தில் உள்ள லேக்லேண்ட்ஸ் பார்க் நடுநிலைப் பள்ளியில் மெலிசா கர்டிஸ் என்ற ஆசிரியர் 2 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து ஒரு குறிப்பிட்ட பொறுப்புகளுக்கு தலைவியாக பணியாற்றி வந்தார். தலைமையாக இருக்கும் போது அந்த பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து அந்த சிறுவனை துன்பப்படுத்தி இருக்கிறார். கிட்டத்தட்ட 20 தடவை பள்ளியில் வாகனத்தில் போகும்போது வரும் போதும் மற்றும் பள்ளியின் அருகில் உள்ள இடங்களில் அந்த சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவன் 2023 ஆம் ஆண்டு ஆசிரியர் செய்த கொடுமையை தன் பெற்றோர் உதவியுடன் காவல் நிலையத்தில் தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சிறுவன் சொன்னது உண்மை என தெரிந்து ஆசிரியரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து 25 ஆண்டுகள் அவர் பாலியல் குற்றவாளியாக கருதப்பட்டு தன் சொந்த குழந்தைகளை தவிர மற்ற குழந்தைகள் இடமிருந்து விலகி இருக்க வேண்டும் என தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் இச்சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.