
பெரு நாட்டில் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெருவில் உள்ள Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவின் படி, மழை பெய்ததால், நடுவர் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார்.
வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் 39 வயதான கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டி லா குரூஸ் மேசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் சில வீரர்கள் தீக்காயங்களுக்கு ஆளானதால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
https://x.com/nexta_tv/status/1853353471312896139?t=rfzFJmWqbp4QyNTCGEEwVA&s=19