நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. விஜயின் அரசியல் கொள்கைகள் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிலையில் தேசியமும் திராவிடமும் இரு கண்கள் என விஜய் கூறினார். அது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் இதற்கு பதில் எங்களது கட்சி தான் கட்சியிலேயே தேசியமும் திராவிடமும் இருக்கிறது.

தமிழகமும் இருக்கிறது. அதனை முற்போக்கு சிந்தனையுடன் கொண்டு செல்வது தான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம். புரட்சி கலைஞர் கேப்டனை விட தமிழை நேசித்தவர்கள் யாருமே இருக்க முடியாது. அது எல்லாருக்கும் தெரியும். விஜயகாந்த் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காமல் சரித்திர சகாப்தத்தை படைத்தவர் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.