
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளிவந்து தமிழ் திரையுலகில் சிறந்த காதல் படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி நடித்திருந்தனர். ஏ.ஆர். ரகுமான் இசை இந்த படத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவனும் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ஷாலினியும் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். நடிகை ஷாலினி விஜயுடன் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படமே நடிகை ஷாலினிக்கு வெற்றி படமாக அமைந்ததால் அவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
அமர்க்களம், அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, பிரியா வரம் தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆன படங்களை நடித்தார். பின் நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சினிமா துறையில் இருந்து விலகினார். தற்போது நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் மாதவனுடன் எடுத்த செல்பியைப் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் “அலைபாயுதே 2” வருமா? என்ற கேள்வி கேட்டுள்ளனர். பலரும் “அலைபாயுதே”ஜோடியை மீண்டும் சந்திப்பதில் சந்தோஷமாக உள்ளது என கூறியுள்ளனர்