
ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் பணத்தை இழக்கின்றனர். உத்தர பிரதேசத்தில், இரண்டு குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வங்கி கணக்குகளை பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் ரூ.75 லட்சத்தை செலவழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழந்தைகள், பெற்றோரிடம் பணம் குறித்த விசாரணைக்கு பதிலளிக்காமல், ‘ஹேக்கர்கள் தான் பணத்தை திருடியிருப்பார்கள்’ என பொய்யாக கூறினார்கள். ஆனால், பின் வங்கி கணக்கு பதிவுகள் ஆய்வு செய்தபோது, அவர்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்தது தெரியவந்தது. பெற்றோர் கவனமாக இருந்தால் இப்படி நடந்திருக்காது என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.