
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் இன்று (அக்.01) அதிகாலை 6 மணியளவில் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவரின் தற்காலிக சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.