ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐ-போன் 16 சீரிஸ் மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, இளைஞர்கள் அதனை வாங்க வரிசையில் காத்திருந்த சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில், குப்பை வாங்கி விற்கும் ஒரு வியாபாரி தனது மகன் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக, ரூ. 1.5 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை பரிசளித்த சம்பவம் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வியாபாரி, தனக்கென ரூ. 85,000 மதிப்புடைய ஐ-போன் வாங்கிய பின்னர், தனது மகனை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த விலை உயர்ந்த போனை பரிசளித்துள்ளார். மகன் சிறப்பாக படித்ததை பாராட்டும் விதமாக, தன் பொருளாதார நிலையை மீறியும் இந்த பரிசை அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வியாபாரியின் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது மகனுக்கு ஆப்பிள் ஐ-போன் வழங்கியதை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோவையும் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதை பாராட்டி, தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Trolls Official (@trolls_official)

“>