
உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை குறித்த புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த ஆசிரியை பணியாற்றும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் செய்ததாக தெரியவந்தது. அவர்கள் ஆசிரியையின் புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி, அதே சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இதனால் அந்த ஆசிரியை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினார்.
காவல்துறையினர் இதுதொடர்பாக குற்றப்பதிவு செய்து, மாணவர்களை விசாரித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் பரவிய அந்த ஆபாச புகைப்படங்களை நீக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.