ஹங்கேரியில் நடைபெற்ற  45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும் அர்ஜூன் வெற்றி பெற்றதன் மூலம் தங்கப்பதக்கம் இந்திய அணிக்கு உறுதியானது.

இதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் என்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.இதேபோன்று மகளிர் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது.

மேலும் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி தங்கம் வென்று அசத்திய நிலையில் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இன்றைய தினம் சென்னைக்கு வந்த வைசாலி, பிரக்ஞானந்தா உள்ளிட்ட தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய அணியினர் மெஸ்ஸி ஸ்டைலில் வெற்றியை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Donatekart | India (@donatekart)