
உத்திரப் பிரதேசத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருட வந்ததாக 7 கூறி கடுமையான கொடுமைக்கு உட்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் மற்றும் அவரது கணவனை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து, அடித்து பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்டனர். அதாவது தியோரி மாவட்டத்தில் கரவுளி என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் கடந்த 13ஆம் தேதி நடந்துள்ளது. அதாவது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நடுத்தர வயது பெண் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் வந்தார்.
அவரைப் பார்த்த கிராம மக்கள் திருட வந்ததாக எண்ணி அந்த பெண்ணை பிடித்து மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அந்த சமயத்தில் தன் மனைவியின் கட்டை அவிழ்க்க வந்த கணவனையும் அவர்கள் சேர்த்து கட்டி வைத்தனர். அதோடு அந்த பெண்ணின் கால்களில் கம்பியை பழுக்க காய்ச்சி சூடு போட்டனர். அந்த கணவன் தன் மனைவி மனநல பாதிக்கப்பட்டவர் என்று கூறியதை அவர்கள் கேட்கவில்லை. அதோடு அந்தப் பெண்ணை கட்டி போட்டது மட்டுமில்லாமல் சிலர் அத்துமீறி தவறாக நடந்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
UP के #देवरिया में चोर समझकर मंदबुद्धि महिला और उसके पति को दबंगों ने पेड़ में बांधकर पीटा !
घर से बुलाकर पेड़ में रस्सी से बांधकर पिटाई की, महिला बेहोश, अस्पताल में भर्ती, वीडियो वायरल !
पुलिस ने 2 दिनों तक मामले को दबाये रखा !!
सुरौली थाना क्षेत्र के परसा जंगल गांव का मामला !! pic.twitter.com/K9VcIraGd7— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) September 18, 2024