தமிழகத்தில் உள்ள புனித தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி. இந்த கோவில் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும்‌. இந்த தேவாலயத்தில் வருடம் தோறும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்த வகையில் நடப்பாண்டில் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன்படி கீழ்வேளூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.