
சூடான் நாட்டில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் ஏற்பட்ட முதல் போராக மாறி உள்ளது. அதன்படி இராணுவத்தின் இரு வேறு பிரிவுகளான SAF or RSF படைகளுக்கிடையே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சுமார் 1.50 லட்சம் மக்கள் இறந்துள்ள நிலையில் ஏராளமானோர் வேறு நாட்டுக்கு குடிப்பெயர்ந்துள்ளனர். அங்கு பசியால் மக்கள் வாழும் நிலையில் தினசரி உணவுக்காகவும் அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பெண்கள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள்.
இந்நிலையில் மத்திய சூடானில் சினார் மாகாணத்தில் ஜால்க்னி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 80 பேரை RSF ராணுவ வீரர்கள் சுட்டு படுகொலை செய்துள்ளனர். அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக அவர்கள் கடத்த முயற்சி செய்தனர். இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவர்களை எதிர்த்தனர். அப்போதுதான் ஈவு இரக்கமின்றி அவர்களை சுட்டு படுகொலை செய்தனர். மேலும் இதற்கு முன்னதாக அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்த நிலையில் அதனை ஏற்க ராணுவம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.