கனடாவில் நடைபெற்ற மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த மிலி முதலிடம் பெற்றுள்ளார். இவர் இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.இந்த போட்டி இளைஞர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு யோகா முக்கியம் என்ற கருப்பொருளில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மிலி, இளைஞர்களின் தற்கொலை எண்ணத்தை தடுக்க யோகா அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

முன்னதாக கடந்த ஜனவரியில் நடந்த கனடா மலையாளி பெண்களின் அழகிப் போட்டியிலும் இவர் முதலிடம் பெற்றிருந்தார். தற்போது சர்வதேச அழகிப் போட்டியிலும் மிலி கலந்து கொள்ள உள்ளார்.