பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் கலந்து கொண்டுள்ளார். இவர் 57 கிலோ எடை பிரிவில் போட்டியிட இருக்கும் நிலையில் அவருடைய உடல் எடையானது 61.5 கிலோ இருந்தது. இதனால் அவர் 10 மணி நேரத்தில் சாப்பிடாமல் கடுமையான உடற்பயிற்சி செய்து 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார். அதாவது போட்டி நடைபெற 10 மணி நேரம் இருக்கும் நிலையில் அதற்குள் தன்னுடைய எடையை 4.6 கிலோ வரை அமன் குறைத்துள்ளார்.

ஏனெனில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் பறிபோனது. இதேபோன்று மற்றொரு பதக்கத்தையும் இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அமன் தன்னுடைய எடையை குறைத்துள்ளார். இந்த தகவலை அவருடைய பயிற்சியாளர் கூறியுள்ளார். மேலும் இதனால் அமனுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.