உலகளவில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவற்றை பார்க்கிங் செய்வது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. சில நாடுகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம்.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஹன்னா ராபின்சன் என்ற பெண் விதிமுறைகளை மீறி வாகனத்தை பார்க்கிங் செய்ததன் காரணமாக ரூ. 11 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட பார்க்கிங் சர்வீஸ் நிறுவன அதிகாரிகளிடம் தான் பார்க்கிங் செய்வதற்கான கட்டணத்தை கட்டிய நிலையிலும் தனக்கு ஏன் அபராதம் விதிக்கப்பட்டது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அதிகாரிகள் கடந்த 2021 ம் ஆண்டிலிருந்து தற்போது வரை பார்க்கிங் விதிமீறலை மீறியதற்காக ஒரு முறைக்கு 170 பவுண்டுகள் விதம் 67 முறை விதி மீறியதால் மொத்தம் 11,000 பவுண்டுகள் என விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பிற்கு ரூ.11 லட்சமாகும். இதற்கு அந்தப் பெண் கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் போதிய இன்டர்நெட் வசதி கிடைக்காததால் தன்னால் ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் பணத்தை செலுத்த முடியவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.