
மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவ ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு உதவ பல சிறப்பு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் 1.5 லட்சம் ஆக இருந்த மத்திய அரசின் மாதிரி திறன் கடன் திட்டத்தின் வரம்பு தற்போது 7.5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதி வரையில் கடன் வாங்கியுள்ள 10,077 நபர்களுக்கு கடன் தொகையை 115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. வங்கிகள், நிதி, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிலும் கடன்களை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.