சென்னையைச் சேர்ந்தவர் பாலமுரளி. இவர் திருச்சி மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சத்யா நகருக்கு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது 2 இடங்களில் திடீரென பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது அன்னை சத்யா நகர் மற்றும் அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த இரு இடங்களிலும் பெரும் அளவில் செய்த ஏற்படாததோடு உயிர் சேதங்களும் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலமுரளியை கைது செய்தனர். அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் அப்படி செய்ததற்கு ஒரு அதிர்ச்சி காரணத்தை கூறினார். அதாவது தனக்கு வெளியே இருக்க பிடிக்காததால் சிறைக்கு செல்ல விரும்புகிறேன். இதனால் தான் போலீஸ் பூத் மற்றும் மதுபான கடையை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினேன். என்னை சிறைக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். மேலும் இவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அவரை கைது செய்து தொடர்ந்து அவரிடம் அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.