
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நான் திரை உலகில் கடந்த பதினைந்து வருடங்களாக இருக்கின்றேன். இனி வரும் காலங்களில் கதையின் ஹீரோவாக மட்டுமே நடிக்க இருக்கிறேன். முக்கியமாக ஜாதி சார்ந்த கதாபாத்திரங்கள் இனிமேல் நடிக்க மாட்டேன்.
கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிக்க உள்ளேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், “காடுவெட்டி” என்ற படத்தில் நடித்ததற்காக ஆர்.கே. சுரேஷ் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.