
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாஜக மற்றும் அதிமுக இடையே கடும் மோதல் வெடித்துள்ள நிலையில் அந்தந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்கள். இப்போது மட்டுமல்ல பாஜகவுடன் எப்போதுமே கூட்டணி இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டு விட்டு செல்வப் பெருந்தகை மீது ஏறிவிட்டது என்றார். இதற்கு பதிலடியாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பல பேய்கள் தமிழகத்தில் உள்ளது, அந்த பேய்களை ஓட்டத்தான் இந்த வேதாளம் வந்துள்ளது. அதனால் ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். முதலில் அந்த பேையை ஓட்டிவிட்டு பிறகு இந்த பேயை ஓட்ட வருகிறேன் என தெரிவித்துள்ளார்.