நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது நடப்பு நிதி ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து அதன் மூலம் இந்தியாவில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை பெற இருக்கிறார். இந்நிலையில் சரியான திட்டமிடல் மற்றும் விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முறை நாட்டின் பொருளாதார முன்னுரிமை மற்றும் சவால்களை தீர்க்கும் விதத்தில் பட்ஜெட் தயார் செய்யப்படுகிறது. குறிப்பாக விவசாயத்துறையில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மூலதன செலவினங்களின் வேகத்தை தக்க வைப்பது, ஜிஎஸ்டி வரியை எளிதாக்குவது மற்றும் வரி சுமையை குறைப்பது ஆகியவைகள் இந்த முறை பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் ‌ என்று கூறப்படுகிறது. மேலும் 2047-ம் ஆண்டு இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முறை பட்ஜெட் இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.