
இந்திய அளவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் முகேஷ் அம்பானி. இவருடைய குடும்பத்தினர் அதிக பால் உற்பத்தி செய்யும் இடமாக அறியப்படும் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் என்ற இனத்தை சேர்ந்த மாட்டுப் பாலை தான் குடித்து வருகின்றனர்.
பொதுவாக இந்த வகை மாடுகள் கருப்பு மற்றும் வெள்ளை அல்லது சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த மாடு சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரை தான் குடிக்கின்றது. இதன் ஒரு லிட்டர் பால் விலை சுமார் 152 ரூபாய் ஆகும். பலரும் வாங்கக்கூடிய பசும்பாலின் விலையை விட அம்பானி குடும்பத்தில் வாங்கப்படும் பாலின் விலை பல மடங்கு அதிகமாக உள்ளது.