
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா தேசிய ஜனநாயக கூட்டணி நியமிக்கும் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெற வாய்ப்பு கிடையாது என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது, பாஜக மட்டும் இன்றி ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணியும் ஒரு கூட்டணியே கிடையாது.
இந்தக் கூட்டணியில் இடம்பெறும் மத்திய அமைச்சர் அவையில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், பௌத்தர் மற்றும் சீக்கியர்கள் இடம்பெற மாட்டார்கள். ஆனால் இந்த அரசாங்கம் 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என்று கூக்குரலிடுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாஜக சார்பில் கேரள மாநிலம் மல்லபுரத்தில் அப்துல் சலாம் என்ற ஒரு முஸ்லிம் வேட்பாளரை மட்டும் பாஜக நியமித்த நிலையில் அவர் இந்திய முஸ்லிம்களைத் தலைவர் முகமது பஷீரிடம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.