
கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 82,273 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் தொண்டர் ஜெய்சங்கர் என்பவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என தன்னுடைய நண்பர்களிடம் பந்தயம் கட்டியுள்ளார்.
ஒருவேளை அவர் வெற்றி பெறாவிட்டால் நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்போது அண்ணாமலை தோல்வி அடைந்து விட்டதால் தன்னுடைய சவாலை நிறைவேற்றுவதற்காக அவர் நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடித்தார். இவர் உடன்குடி ஒன்றிய பாஜகவின் நலத்திட்ட பிரிவு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். மேலும் இவர் மொட்டை அடித்து ரவுண்டானாவை சுற்றி வந்தது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.