
ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்.ஆர்.சிபி கட்சி வேட்பாளராக ரோஜா போட்டியிட்ட நிலையில் அங்கு 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் ரோஜா வாடிய முகத்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 151 தொகுதிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் இந்த முறை 15 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று ஆட்சியை இழந்துள்ளது.