ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார். அதாவது அவரிடம் அடுத்து என்ன என்று மார்க் கேட்டதற்கு ரோகித் சர்மா டி20 போட்டி தான் என்று கூறியுள்ளார்.

இதனால் அவர் டி20 போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் அடுத்த வருடம் நடைபெறும் மெகா ஏலத்திலிருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்படுவார் என்று மார்க் பவுச்சர் மறைமுகமாக கூறியுள்ளார். அதாவது அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா விலக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ரோகித் சர்மாவின் வருங்கால பற்றி நாங்கள் அதிகமாக பேச விரும்பவில்லை அவர் எடுத்த முடிவு சரிதான் என்று மார்க் பவுச்சர்  கூறியுள்ளார்.