
சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த பிப்ரவரி மாதம் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி யுபிஐ மூலம் பணம் பெறுவதற்காக புதிய கையடக்க கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் டிக்கெட் பெற பணம் செலுத்தலாம்.
இந்நிலையில் தற்போது அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதியை தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 328 ஏசி பேருந்துகள் உட்பட 1068 பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜிபே, போன் பே, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.