
பஞ்சமி நிலத்தை மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின் போது உயர்நீதிமன்றம், பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பிற பிரிவினருக்கு விற்பது சட்டவிரோதமானது.
இதனால், அந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். பஞ்சமி நிலத்தை மீட்டு, தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்