தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 ரயில் சேவைகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு ஐ ஆர் சி டி சி திட்டமிட்டுள்ளது. இந்த ரயில்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் சிறப்பு ரயில்கள் ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இது குறித்த விவரங்களும் விரைவில் வெளியிடப்படும்.