இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 15 தவணைகளில் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 16 வது தவணை பணம் எப்போது வரும் என்று விவசாயிகள் நடைபெறும் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜனவரி 21ஆம் தேதி விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.