
பிரதமர் மோடி டிரஸ்ஸிங் ரூமில் வீரர்களைச் சந்திப்பது பெரிய விஷயம் என்று பாராட்டினார் முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்..
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்ந்தது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனம் உடைந்தனர். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் தனது வீரர்களை ஊக்கப்படுத்த டிரஸ்ஸிங் அறைக்கு வந்தார். ரோஹித் மற்றும் கோலியின் கைகளை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி மனவுறுதியை ஏற்படுத்தினார். மேலும் ஷமியை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பிரதமர் மோடி இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்று வீரர்களுடன் பேசி ஆறுதல் சொன்னதை முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
சேவாக் பிரதமரை பாராட்டினார் :
தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் பிரதமர் நரேந்திர மோடி டிரஸ்ஸிங் ரூமில் வீரர்களை சந்தித்ததற்கு பதிலளித்துள்ளார். பிரதமர் டிரஸ்ஸிங் ரூமுக்கு வந்தது பெரிய விஷயம் என்று சேவாக் கூறினார். எந்த ஒரு நாட்டின் பிரதமரும் இதைச் செய்யும்போது, அது வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கிறது என்றார்.
செய்தி நிறுவனமான ANI-யிடம் சேவாக் பேசுகையில், ‘ஒரு நாட்டின் பிரதமர் வீரர்களை சந்தித்து ஊக்கப்படுத்துவது போன்ற சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு, இது அபூர்வமானது. குறிப்பாக எந்த அணியும் தோற்று அதன் பிரதமர் வீரர்களை சந்தித்ததாக நான் பார்க்கவில்லை. தோல்விக்கு பின் மனம் உடைந்த வீரர்களுக்கு தோள் கொடுக்க தனது பிஸியான கால அட்டவணையில் நேரம் ஒதுக்குவதை நான் பார்த்ததில்லை. டிரஸ்ஸிங் ரூமில் வீரர்களைச் சந்தித்து ஊக்கப்படுத்தியது பிரதமரின் சிறப்பான நடவடிக்கை. டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்று சிறுவர்களின் மன உறுதியை உயர்த்துவது பிரதமர் மோடியின் நம்பமுடியாத செயலாகும்’ என்றார்.
மேலும் சேவாக் கூறுகையில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் போது, உங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் போல ஆறுதல்படுத்த ஒருவர் தேவை. எனது பார்வையில், பிரதமர் செய்த ஒரு நல்ல பணி. இது வீரர்களின் உற்சாகத்தை அதிகரிப்பதோடு, வரும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பார்கள். எங்கள் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இது ஒரு மனதைத் தொடும் சைகை என்று நான் நம்புகிறேன். அடுத்த முறை இறுதித் தடையைத் தாண்டுவதற்கு அது எங்களைத் தூண்டும். எங்களால் வெற்றி பெற முடியாத இறுதிப் போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்றார்.
கடைசியாக சேவாக் கூறுகையில், ‘எந்த ஒரு தனிநபராலும் நாங்கள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடையவில்லை. அணி நன்றாக விளையாடும் போது, அதை நாங்கள் பாராட்டுகிறோம், அது சரியாக விளையாடாத நாட்களில் கூட, நாங்கள் அதை ஆதரிக்க வேண்டும். தோல்வியுற்ற அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்குச் சென்ற பிரதமர்கள் மிகக் குறைவு. எந்த ஒரு நாட்டின் பிரதமரும் வீரர்களை சந்தித்தால், அது எந்த விளையாட்டாக இருந்தாலும், உற்சாகத்தை அதிகரிக்கிறது” என்று கூறினார்..
ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது :
ஆஸ்திரேலிய அணி 8வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட வந்தது. 1975ல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் 1996ல் இலங்கைக்கு எதிராக 2 முறை தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அதேசமயம் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 1987, 1999, 2003, 2007, 2015 மற்றும் 2023ல் 6 முறை பட்டத்தை வென்றது. இதில் 1999 முதல் 2007 வரை தொடர்ந்து 3 முறை ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Prime Minister Narendra Modi met Team India in their dressing room after the ICC World Cup Finals at Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat on 19th November.
The PM spoke to the players and encouraged them for their performance throughout the tournament.
(Video:… pic.twitter.com/ZqYIakoIIj
— ANI (@ANI) November 21, 2023