இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் முடிந்தவுடன், இந்தியன் பிரீமியர் லீக்கின் காற்று நாடு முழுவதும் வீசத் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 2024 ஏலம் நெருங்கி வருகிறது, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை இறுதி செய்ய உரிமையாளர்களுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளன.

ஐபிஎல் உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 26 (நாளை) கடைசி தேதியாகும். Cricbuzz இன் அறிக்கையின்படி, பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரரான சாம் கரனை விடுவிக்க வாய்ப்புள்ளது.

அதோடு ஹாரி புரூக், சாம்கரன், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன் மற்றும் ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களும் விடுவிக்கப்படலாம் என்று கிரிக்பஸ் தெரிவித்துள்ளது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆன்ட்ரே ரஸ்ஸலை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான். மறுபுறம் டெல்லி கேப்பிட்டல்ஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அந்த மாற்றம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் சில பிரகாசமான பெயர்கள் இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் வரலாம். இதில் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் இங்கிலிஸ், டிராவிஸ் ஹெட், ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரல் மிட்செல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இவர்களை எடுக்க அணிகள் போட்டி போடலாம்..