
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பணையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடையவர். மேலும் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் பெயர் உள்ளது. கடந்த மே 19ம் தேதி அன்று ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக இவருடைய வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டடு,
அதில் இவர்களுடைய கூட்டாளிகள் ஒன்பது பேர் பட்டாங்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்ட அனைவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சன்மங்கலம் என்ற பகுதியில் கொம்பன் என்கிற ஜெகனை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரை தாக்கி தப்ப முயன்ற ஜெகனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
கொம்பன் என்ற ஜெகன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது அவர் உடல் லால்குடி அரசு மருத்துவமனையில் உள்ளது. காயமடைந்த போலீசாரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சென்று கொண்டிருக்கிறார். ரவுடியை என்கவுண்டர் செய்த சம்பவம் அந்த பகுதியே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.