வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
தூண்களை தட்டினால் சரிகமப ஓசை…! “6 முகங்களும் 12 கைகளும் கொண்ட முருகப்பெருமான்”… நெல்லுக்கு வேலியாக காவல் காத்த தெய்வம்… நெல்லையப்பர் கோவில் பற்றி பலரும் அறியா தகவல்..!
தென்னகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க புண்ணிய ஸ்தலங்களில் திருநெல்வேலியில் அமைந்திருக்கும் அருள்மிகு நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் அடிஎடுத்து வைக்கும் பக்தர்களுக்கு, அதன் பிரம்மாண்டமான கட்டிடக் கலையும், ஆன்மீக…
Read more“பக்தர்களே ரெடியா…?” சங்கரன்கோவில் ஆடித் தபசுத் திருவிழா கோலாகலம்… ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகுவிமரிசையாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ‘ஆடித் தபசு’ திருவிழா தற்போது மிகக் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. ‘ஹரியும் சிவனும் ஒன்றே’ எனும் உயரிய…
Read more