வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டியில் இருந்து குப்பம் செல்லும் சாலையில் இருக்கும் பத்தல பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதுகுறித்து வனத்துறையினரும் போலீசாரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டி ஆந்திர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆந்திர மாநில வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரமாக மோதிய வாகனம்…. இறந்து கிடந்த பெண் சிறுத்தை…. வனத்துறையினர் விசாரணை…!!
Related Posts
யாரைப் பார்த்து சவால் விடுறீங்க? “எந்தக் கொம்பனாலயும் அதிமுகவை அசைக்க முடியாது.!”.. பல கட்சி மாறிட்டு வந்தவருக்கு என்ன தெரியும்?”.. ஆதவ் அர்ஜுனாவை ஓப்பனா மேடையிலேயே வறுத்தெடுத்த இபிஎஸ்..!!
“தமிழக அரசியல் களம் தற்பொழுது திமுக, தவெக மற்றும் அதிமுக ஆகிய மூன்று பிரதான கட்சிகளுக்கும் இடையே வார்த்தை யுத்தங்களால் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் தொடர் விமர்சனங்களுக்கும், திமுகவின் சவால்களுக்கும் மத்தியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
Read more“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read more