
என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பாரத ஜனதா கட்சி ரிலீஸ் செய்த DMK files பார்ட் ஒன்ல ஜெகத்ரட்சகனுடைய சொத்து மட்டுமே 51 ஆயிரம் கோடி ரூபாய் நாம காட்டி இருக்கின்றோம். 51 ஆயிரம் கோடி தமிழகத்தின் உடைய வருஷ பட்ஜெட்டுல 6இல் ஒரு பங்கு அது. இன்னைக்கு இன்கம் டேக்ஸ் மட்டுமே 1225 கோடி ரூபாய் வரி ஏய்பு புடிச்சி இருக்காங்க. இங்க ஏழை மக்கள் நின்னுகிட்டு இருக்காங்க. இது எல்லாம் உங்க காசுங்கமா. இதுலாம் உங்களுக்கு வரவேண்டிய பணம். நீங்கள் ஏழையாக இருந்திருக்கக் கூடாது. இந்த பணம் வந்திருந்தால்… தொடர்ச்சியாக ஏழை மக்கள் இதுல பாருங்க..
கள்ள கிணறுல மோகன் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்டது டாஸ்மார்கில் ஒரு ரவுடி சாராயத்தை குடிச்சுட்டு வந்து வெட்டுறான். டாஸ்மார்க் தமிழகத்தில் நடத்தப்படுவது ஏதோ டாஸ்மார்கை முடிட்டா, வருமானம் போயிரும்… தமிழக அரசை நடத்த முடியாது என்பதற்காக இல்ல… டாஸ்மார்க்கை முடிவிட்டால் ? திமுகவினுடைய பெரும்புள்ளிகள் நடத்தக்கூடிய சாராய ஆலைகளின் வருமானம் போய்விடும். ஜெகத்ரட்சகருக்கு 500 கோடி ரூபாய் தப்பு கணக்கு காட்டக்கூடாது.
தெளிவா புரிந்து கொள்ள வேண்டும்… சாராய ஆலை திமுக கையில்… பணத்தை அங்கிருந்து எடுப்பதற்கு டாஸ்மாக் கடைகள்…. திமுகவில் உள்ளவர்களின் சாராய ஆலையில் இருந்து டாஸ்மார்க்கு சாராயம்… எப்படி வச்சிருக்கானுங்க ? எவ்வளவு விஞ்ஞான பூர்வமா கலைஞர் கருணாநிதி அவர்கள் எப்படி இதை கட்டி காத்து உருவாக்கி இருக்கின்றார் பாருங்க, இதையெல்லாம் உடைத்து காட்டவேண்டிய நேரம் நமக்கு வந்திருக்கிறது என தெரிவித்தார்.