அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள மவுயி தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பரவி ஏராளமான இழப்புகள் ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1700 களில் உருவாக்கப்பட்ட வரலாற்று சுற்றுலாத்தலமான லஹேனா நகரமும் இந்த காட்டுத்தியில் பாதிக்கப்பட்டது. இந்தக் காட்டு தீ விபத்தினால் 271 கட்டுமானங்களும் 19000 வீடுகள் கடைகள் போன்றவையும் சேதமடைந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட 150 வருட பழமை வாய்ந்த ஆலமரமும் இந்த காட்டுத்தீயில் கருகி உள்ளது. மீட்பு குழுவினர் இந்த காட்டுத்தீயில் சிக்கிய பலரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் மாயமானவர்களின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது லஹேனா மற்றும் மத்திய பகுதிகளிலிருந்து காணாமல் போன 388 பேர் பற்றிய அடையாளத்தை மத்திய புலனாய்வு அமைப்பாளர் எஃப்பிஐ கண்டறிந்துள்ளது. இதையடுத்து 388 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க காட்டு தீ விவகாரம்…. 388 பேர் மாயம்…. பெயர் பட்டியல் வெளியீடு….!!
Related Posts
காலநிலை மாற்றம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….??
காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும் அடிக்கடியும் நிகழும் போது நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக கூறப்படுகிறது. வெப்ப அலையின் போது பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனை தொடர்பான சேர்க்கை…
Read moreதுபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!
துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…
Read more