சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“இரும்புச் சத்து மாத்திரையால் விபரீதம்!”.. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் உறைந்த திருவண்ணாமலை..!!!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு வழக்கமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைச் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே ஆறாம் வகுப்பு பயிலும் பத்து மாணவர்களுக்குச் திடீரென…
Read more“இன்ஸ்டாவில் பலருடன் பழக்கம்”… புருஷன் கண்டித்து அடங்கல… 24 வயது வாலிபருடன் கள்ள உறவு… நள்ளிரவில் வீட்டுக்கே போன கள்ளக்காதலன்… உடம்பெல்லாம் வெந்து அலறிய பெண்… ஈரோட்டில் பகீர்..!!
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சென்னப்பன். இவரது மகள் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி 4 வயதில் தனிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் அருகில் மகனுடன் தனித்து வசித்து வந்தார். இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரத்தைச்…
Read more