கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் மீனவரான அந்திரேயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மேரி உயிரிழந்தார். இதனால் தனிமையில் யாரிடமும் பேசாமல் இருந்த அந்திரேயாஸ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்திரேயாசின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிமையில் வாடிய மீனவர்…. மனைவி இறந்த 18 நாளில்…. பேரும் சோகம்…!!
Related Posts
சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்….நெல்லையில் நெகிழ்ச்சி…!!!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சேவல் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த சேவலை வீட்டில் பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக…
Read moreரூ.500 போட்டா ரூ.1000 ரிட்டன்… ரூ.300 கோடியை அலேக்காக சுருட்டிய பலே கில்லாடி…. சேலத்தில் அரங்கேறிய மோசடி….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 300 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை…
Read more